திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை கழிவுநீர் தொட்டி மேல் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டியில் நேற்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் தலை குப்புற படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிருடன் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நர்ஸ்கள் உடனடியாக குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.