கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகண்டை கூட் ரோட்டில் பெரிய ஏரி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏரி நிரம்பி உள்ளது. விடுமுறை தினங்களில் சிறுவர்களும் பொதுமக்களும் ஏரியில் குளிப்பதும் மீன்பிடிப்பதும் வழக்கம். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் மீன்பிடிப்பதற்காக ஏரியின் கரையின் மீது நடந்து சென்றனர்.

அப்போது பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று புதருக்கு அருகே கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு அந்த மலைப்பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.