கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் அருகே இருக்கும் 100 அடி ரோடு ஜி.பி சிக்னல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(52), சத்யாகு(57) என்பது தெரியவந்தது.

இருவரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிதாஸ், சத்யாகு ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.