கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஆணையும் போலீசார் புடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அசாருதீன், அவரது மனைவி ஷபீனா என்பது தெரியவந்தது.

அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், தராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.