புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும் முத்துலட்சுமி என்பது தெரியவந்தது.

இருவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனால் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்த 29 மது பாட்டில்கள், 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.