புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தெற்கு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென அலறி சத்தம் போட்டது. இதனால் வீரம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வெறிநாய் 3 ஆடுகளை கடித்து குதறியதை கண்டு வீரம்மாள் அதிர்ச்சியடைந்தார். அந்த 3 ஆடுகளும் பரிதாபமாக இறந்தது.

கடந்த ஒரு மாதத்தில் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியது. எனவே தெரு நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.