தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் (மார்ச்) இந்த மாதம் முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ரூ.1167 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.1065.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.1174 ஆகவும், கயத்தாறில் ரூ.1177 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.1165.50 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.1184.50 ஆகவும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1167 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1167 ஆகவும் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நுகர்வோர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.