சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி-சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பிடித்திய எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஏராளமான மரம் மற்றும் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இந்த பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.