மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடியில் கூலி வேலை பார்க்கும் நல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கலைச்செல்வியின் சகோதரி ஒருவர் கணவரைப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என நல்லையன் கலைச்செல்வியிடம் கூறியுள்ளார். இதற்கு கலைச்செல்வி மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த நல்லையன் ஒரு கல்லை தூக்கி கலைச்செல்வியின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை பார்தது அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கலைச்செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.