சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமையனூர் எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் திருப்பதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோகிலா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கங்கா(20), கௌரி(18) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விபத்தில் திருப்பதியில் இரண்டு கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 8 நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருப்பதி திடீரென உயிரிழந்தார்.

இந்நிலையில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த கோகிலா அழுது கொண்டே இருந்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கோகிலாகவும் உயிரிழந்தார். திருப்பதியின் உடலுக்கு அருகிலேயே கோகிலாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த மகள் கங்காவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு தான் ஆகிறது. கௌரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.