புதுக்கோட்டை மாவட்டத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயதுடைய ப்ளஸ்-2 மாணவியை கட்டாயப்படுத்தி கண்மாய் கரைக்கு தூக்கி சென்று காளிதாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிதாஸை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.