தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த தெரு நாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 7 வயதுடைய மோனிஷா ஸ்ரீ என்ற சிறுமி, ஜெயசித்ரா, சுபத்ரா தேவி, ரேவதி உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பெண்கள் உட்பட 13 பேரும் வருசநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சிறுமி உட்பட 10 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அட்டகாசம் செய்யும் தெரு நாயை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.