கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேறிவிளை பேருந்து நிறுத்தம் அருகே நெல்லையைச் சேர்ந்த மரகதவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுபாட்டை இழந்த மரகதவேலின் மோட்டார் சைக்கிள் அந்த வழியாக நடந்து சென்ற மாதவன், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அஜித் ஆகியோர் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜித் மற்றும் மரகதவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரகதவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.