திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மணிமேகலை திருச்சியில் இருக்கும் ஒரு பள்ளி விடுதியில் தங்கி இருந்து பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்துவிட்டார். இதனால் ராஜரத்தினம் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் வீட்டிற்கு வந்த மணிமேகலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.