நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தம்பி பாளையத்தில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சௌமியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சௌமியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்புலிங்கம் தனது மனைவியிடம் 5 லட்சம் ரூபாய் பணம் தருமாறு கேட்டார்.

மேலும் விவாகரத்து செய்வதற்கு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சௌமியா மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ஜம்புலிங்கம் அரிவாளால் தனது மனைவியை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த சௌமியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.