நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி வாடிக்கையாறு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான கருப்பண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் வைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.