சென்னையில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே சென்ற போது விருதாச்சலம் நோக்கி வந்து தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் மாதவன், கண்டக்டர் ராஜேந்திரன், பணிகளான ஜெயக்குமார், கலைச்செல்வி உள்பட 15 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 15 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.