தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளிக்கிழமை முதல் அவரவர் பயின்ற பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரும் 10ம் வகுப்பு, +1 மாணவர்கள் மே 24-27 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெற தவறிய 10ம் வகுப்பு, +1 மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 27 முதல் நடைபெற உள்ளது.