விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் திடீரென கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி உட்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.