செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசித்து வரும் கிரிஷ் தனது 10 மாத ஆண் குழந்தையுடன் குடியிருப்பு பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் நடைபயிற்சி சென்ற போது அவரது நாய், குழந்தையின் கை விரலைக் கடித்தது. குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து சென்ற கிரிஷ், வேலாயுதம் மீது புகார் அளித்தார். குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவம் தொடர்வதால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.