தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் எனவும் அரசின் கால அவகாசத்தை ஏற்க தயார் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் எப்போது அமல்படுத்தப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.