கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும் ரிவர்ஸ் நோக்கி இயக்கப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது.

ரயில் நிலையத்தில் சிக்னல் இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரயில் சற்று தாமதமாக இயக்கப்பட்டது. ரயில் நிற்காமல் செல்வதைப் பார்த்த பயணிகள் இடையே சிறிது குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இது ஒரு சிறிய சம்பவம்தான். பெரிதாக எதுவும் பிரச்சினை இல்லை என்று ரயில்வே நிர்வாகி தெரிவித்துள்ளார்.