நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பிகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள தனது விவசாய நிலத்திற்குச் சென்ற அமித் குமார் என்ற விவசாயிக்குக் காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி; அங்கு சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட பிரம்மாண்டமான முதலை ஒன்று நடமாடிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர் பதறிப்போனார். எனினும், சற்றும் பதற்றமடையாமல் சாதுரியமாகச் செயல்பட்ட அந்த விவசாயி, அருகில் இருந்த கயிற்றைப் பயன்படுத்தி அந்தப் பயங்கரமான முதலையை யாருக்கும் எந்தவிதத் தீங்கும் செய்ய முடியாதவாறு சாமர்த்தியமாகக் கட்டிப் போட்டார்.
I told you before… Bihar is not for beginners! 🐊😅
A crocodile was spotted in a paddy field. Instead of panicking, a young man managed to restrain it, carried it on his shoulder, and walked straight to the nearest police station!
Only in Bihar do you come across stories that… pic.twitter.com/x8tz2EN9tr
— Mukul Kumar Ravi (@MukulKrRavi) August 2, 2026
பிடிக்கப்பட்ட அந்தப் பெரிய முதலையைத் தன் தோளின் மீது பத்திரமாகச் சுமந்து கொண்டு ந நடுரோட்டில் நடந்து சென்ற அந்த விவசாயியின் தைரியம் அனைவரையும் வியக்க வைத்தது. அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அவர் முதலையைக் கொண்டு சென்றபோது அங்கே அதிகாரிகள் யாரும் இல்லாததால், சற்றும் யோசிக்காமல் நேராக அருகில் உள்ள பீம்நகர் காவல் நிலையத்திற்கே அந்த முதலையைத் தூக்கிச் சென்றார். தோளில் ஒரு பெரிய முதலையுடன் திடீரென காவல் நிலையத்திற்கு உள்ளே நுழைந்த விவசாயியைப் பார்த்து அங்கே பணியில் இருந்த காவலர்களும் அதிகாரிகளும் ஒருகணம் என்ன செய்வதென்று தெரியாமல் ஷாக்கில் உறைந்து போயினர்.
உடனடியாக இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்து அந்த முதலையைத் தங்களது பாதுகாப்பான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றனர். முதலைக்குத் தேவையான உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த பின், அதிகாரிகள் அதனைப் பாதுகாப்பான ஆற்றுப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர். பொதுமக்கள் யாரும் இதுபோன்று ஆபத்தான வன விலங்குகளைச் சொந்தமாகப் பிடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும், உடனடியாகத் துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
