உத்திரபிரதேச மாநிலத்தில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிப்போன மாப்பிள்ளையை மணப்பெண் 20 கிலோமீட்டர் ஓடிச் சென்று பிடித்து வந்த சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அதான் பகுதியை சேர்ந்த இளைஞரும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவர்களுக்கும் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமண நாளன்று திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருமணத்திற்கு வர மாட்டேன் என்று மணமகன் ஓடி சென்றார். இதனால் ஓடிச்சென்ற மணமகனை இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்று மணமகள் பிடித்து கோவிலுக்கு இழுத்து வந்த பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சுவாரசிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.