செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தரப்பினர் திமுகவுக்கு முன்பு… கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது,  ஈட்டிய செல்வத்தைக் கொண்டு… மக்களை எல்லாம் அள்ளிச் செல்லலாம் என்று பார்க்கிறார்கள். எப்படியும் எனக்கு தெரிஞ்சி அவங்க சொல்றது 20 லட்சம் பேர்,  25 லட்சம் பேருன்னு சொல்லுறப்ப….

எப்படியும் 250 கோடிக்கு மேல,  அவர்கள் மக்களுக்கு பணத்தை வாரி வழங்கிய ஒரு நல்ல காரியத்தை செய்கின்றார்கள். மக்கள் செல்வார்களா என்று தெரியவில்லை? ஆனால் எல்லா பகுதிகளிலும் ஒவ்வொரு நபருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூப்பிடுகின்றார்கள். அவர்கள் என்னதான் கூட்டத்தை கூட்டு சென்றாலும்… அது தானாக கூடாத வரையில், அது ஒன்றும் வெற்றியை தராது.

எடப்பாடி பழனிச்சாமி அம்மாவுடைய கட்சியை கபளீகரம் செய்து இருக்கிறார். அதை ஜனநாயக முறையில் மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான்…  2017இல்  அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் ”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” நாங்கள் தொடர்ந்து நம்பிக்கையோடு போராடி…  உறுதியாக அம்மாவின் இயக்கத்தை வருங்காலத்தில் ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம் என தெரிவித்தார்.