தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டுகளை அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு ஐந்து கடைகள் என 200 டாஸ்மாக் கடைகள் நவீனப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலமாக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வாங்கும் நடைமுறை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் மூலமாக மதுபானங்கள் விலையில் மோசடி செய்ய முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் அறிந்த குடிமகன்கள் பலரும் இதனை கொண்டாடி வருகிறார்கள்.