பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 10 நாட்களுக்கு நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் ஒரு போக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் பொறுப்போக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதமும் இருப்பை பொறுத்து குடிநீருக்காகவும் நீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.