தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ள நிலையில் தற்போது அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி டெல்டா பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரண பணிகளை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கனமழையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.