வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் மாற்றம் ஏதாவது இருந்தால் அதனை தெரிவிப்பதற்கு இன்று கடைசி நாள் என வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தரவரிசை பட்டியல் வெளியானது.

இதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில் மறு மதிப்பீடு காரணமாக மாணவர்களின் மதிப்பெண் விவரங்களில் அல்லது தரவரிசை பட்டியலில் ஏதாவது மாற்றம் இருந்தால் அவற்றை தெரிவிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.