ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மயிலம்பாடி முருகன் கோவில் தோட்டம் அருகே முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவகாமி(45) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்த புறப்பட்ட சிவகாமி இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் வரதநல்லூரில் இருக்கும் காவிரி ஆற்றில் சிவகாமி சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகாமி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.