சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக அரசு அறிவித்த ரூபாய் 6,000 தொகைக்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்படும். மழைநீர் கிட்டத்தட்ட 80 சதவீதம் வடிந்துள்ளது, சில இடங்களில் நீர் தேங்கி உள்ளது அதை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதி அறிவித்துள்ளது விரைவில் அடுத்த கட்ட நிதியை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்..