பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன்கடை மூலம் பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கு ஏதுவாக வரும் வெள்ளிக்கிழமை (ஜன.12) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மக்கள் பரிசுத் தொகுப்பை ரேஷனில் பெற்றுக்கொள்ளலாம். வேலை நாளை ஈடு செய்வதற்காக 16ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.