பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரு நாள் உல்லாசமாக இருந்ததை அந்த அந்த சிறுமி பார்த்துவிட்டாள் என தெரிந்ததும் அவளை அடித்து துன்புறுத்தி மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார் அந்த கொடூரத்தாய். உடலில் காயத்துடன் அந்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.