கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதாவரம் சரல்விளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவம் நடைபெற்ற அன்று மனைவியும் பிள்ளைகளும் வெளியே சென்ற பிறகு ராஜேந்திரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.