தமிழகத்தில் கோடை காலம் முடிந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பருவ மலையானது பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை கருதி பள்ளி மாணவர்களுக்கு அவ்வப்போது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆடிப்பூரம் விழா வருகின்ற ஜூலை 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த விழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.