நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும் காமெடியை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமணத் தம்பதிகளுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் அந்த புதுமண தம்பதிகளுக்கு தக்காளியை அன்பளிப்பாக கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அதேபோல மணமக்கள் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.