அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் கிரெகர்-பிரே மிக்கோலியோ தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் கோரே என்ற மகன் இருந்துள்ளார். இதில் கோரே உடல் பருமனாக இருந்ததாக கூறி அவருடைய தந்தை உடற்பயிற்சி செய்யுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். அதன்படி தன் மகனை அவர் டிரெட்மில்லில் ஓட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் கோபம் அடைந்த கிரெகர்‌ மீண்டும் மீண்டும் அவனை ஓட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிரெகரை கைது செய்த சிறையில் அடைத்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது கிரெகர்‌ தன் மகனை உடற்பயிற்சி செய்ய வைத்து கட்டாயப்படுத்திய வீடியோ நீதிபதியின் முன் போட்டு காட்டப்பட்டது. அந்த வீடியோவை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.