தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடும் வெப்ப அலை வீசக்கூடும்.

அதோடு வெப்ப அலை தீவிரமடையவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.