திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே மே 3 நாளை முதல் 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை காலை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கமாக சென்னையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.