தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும் வகையில் அறநிலையத்துறை ஈடுபடுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ள அரசு அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.