கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் கிறிஸ்துதாஸ் கிண்டல் செய்து, ஆபாச சைகை காட்டுவது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை கிறிஸ்துதாசை கண்டித்த போது அவர் உன் மகள் முகத்திலும், உன் முகத்திலும் ஆசிட் வீசி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

மேலும் அவர் மாணவியின் தந்தையை கம்பால் தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கிறிஸ்துதாசை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றம் கிறிஸ்துதாசுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.