2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மே அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைச்சர்கள் வெளிநாடு செல்லவுள்ளது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 10, 11-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.