கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

சென்னையில் நண்பகலில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென பல்வேறு இடங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கோயம்பேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் லேசான மழையும், அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், ஆவடி, பூந்தமல்லி, போரூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.