தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.