ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவெரா மறைவை தொடர்ந்து கடந்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடந்த நிலையில் அதில் திமுக காங்கிரஸ் வேட்பாளர் இவிகே எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவனின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான விஜயகுமாரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் பணம் பட்டுவாடா மற்றும் பரப்புரையில் விதிமீறல் குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.