வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவர்கள் திறனறித் தேர்வில் பங்கேற்பதற்கான தகுதி சான்று இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்தவர்கள் இந்தியாவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அந்த தேர்வு நடப்பு ஆண்டில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்கே தகுதிச் சான்றிதழ் அவசியம். அதனை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணைய பக்கத்தின் மூலமாக இன்று முதல் மார்ச் எட்டாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவர் ஆணையம் தெரிவித்துள்ளது.