காமராஜர் மணி மண்டபம் எதிரே மது கடை அமைக்க அனுமதி வழங்கிய புதுச்சேரி அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரே புதிய மதுக்கடையை திறக்க என்.ஆர் காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமி பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மது கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய மக்கள் காமராஜர் மண்டபம் எதிரே மது கடை திறக்க அனுமதி அளித்திருப்பது காமராஜரை அவமதிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளனர்