மேற்கு வங்கத்தில் காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு காதலன் விற்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் சோனா கட்சி என்ற பகுதி சிவப்பு விளக்கு பகுதியாக அறியப்படுகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர் பந்த் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாவட்டத்தை சேர்ந்த சிறுவனை பேஸ்புக் வழியாக தொடர்பு படுத்திக் கொண்டார்.

இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் நேரில் வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என அச்சிறுவன் அழைக்க, காதலியும் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை ஏமாற்றிய சிறுவன் 40,000 ரூபாய்க்கு அந்த சிறுமையை சிவப்பு விளக்கு பகுதியில் விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிறுமி மீட்கப்பட்டார். இதை அடுத்து சிறுமியை விற்ற சிறுவன், அவரை வாங்கியவர், இடைத்தரகராக செயல்பட்டவர் என மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.