அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஓ. பன்னீர்செல்வம் ஒரு எரிமலை போல புகைந்து கொண்டே தான் இருப்பார். அவர் உடனே வெடிக்க மாட்டார். ஆனால் வெடிக்கும் போது சேதாரம் பெரிதாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பைனான்சியர். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் பைனான்சியராக இருக்க விரும்பவில்லை என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் தவறு என்ன என்பதை அவரோடு இருப்பவர்களே சொல்வார்கள் என்றும் கூறினார்.