தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு தோறும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு தகுதி உடையோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.